ஜெகன்மோகன் ரெட்டி பிசராச வாகனம் மீது செருப்பு வீச்சு... அதிர்ச்சியில் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா உள்ள கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேருந்தில் யாத்திரையாக சென்று பிரசாதம் செய்து வருகிறார். அப்துபோல் ஆந்திரா, அனந்தபுரம் அடுத்துள்ள பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தபோது ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் கூறியிருந்தனர். 

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் செருப்பு ஒன்றை வீசினார். 

அந்த செருப்பு பறந்து வந்து ஜெகன்மோகன் ரெடியை தாண்டி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் மற்றும் பாதுகாவலர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி செருப்பு வீசியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaganmohan Reddy threw shoe vehicle


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->