சுதந்திர போராட்ட வீரர் திரு.ராம் பிரசாத் பிஸ்மில் அவர்கள் பிறந்ததினம்!.
It is the birth anniversary of the freedom fighter Mr Ram Prasad Bismil
சுதந்திர போராட்ட வீரர் திரு.ராம் பிரசாத் பிஸ்மில் அவர்கள் பிறந்ததினம்!.
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார்.
இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மாத்ரிவேதி(Matrivedi) என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.

மேலும், இவர் சுவாமி தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ்(Arya Samaj) இயக்கத்தில் இணைந்தார்.தனது சகாக்களுடன் இணைந்து காகோரி (Kakori) சதித் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
1925-ல் காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, 1927 டிசம்பர் 19 ஆம் தேதி தனது 30வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
English Summary
It is the birth anniversary of the freedom fighter Mr Ram Prasad Bismil