அடுத்த டார்கெட் சூரியன்! செப்டம்பர்-2ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1! இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா-L1 செயற்கை கோளை சூரியனை ஆய்வு செய்ய உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியன் மற்றும் பூமி இடையிலான லாக்ரேஞ்ச் புள்ளியை (L1) சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தி சூரியனை ஆராய இஸ்ரோ திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதலத்தில் இருந்து PSLV -C 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO announced Aditya L1 will be launched on September2


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->