சைபர் மோசடி: கடந்த 2024-இல் மட்டும் ரூ.22,845 கோடியை இழந்துள்ள இந்தியர்கள்..!
Indians lost Rs 22 845 crore to cyber fraud in 2024 alone
கடந்த 2024-ஆம் ஆண்டில் சைபர் மோசடியில் இந்தியர்கள் ரூ.22,845.73 கோடியை இழந்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டை காட்டிலும் 206 சதவீதம் அதிகம் ஆகும் என தெரிகிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் குறிப்பிட்டுள்ளதாவது: National Cyber Crime Reporting Portal (NCRP) and the Citizen Financial Cyber Fraud Reporting and Management System (CFCFRMS) ஆகிய இணையதளங்களில் பொது மக்கள் சைபர் மோசடி குறித்து புகார் அளிக்கின்றனர். இரண்டையும், இந்தியன் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கி வருகிறது தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் புகாரின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு சைபர் மூலம் நிதி மோசடி நடந்ததாக 36.37 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு 24.42 லட்சம் புகார்கள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2023-ஆம் ஆண்டு நிதி மோசடியில் ரூ.7,645.18 கோடி இந்தியர்கள் இழந்துள்ளதாவும், கடந்த 2024-ஆம் ஆண்டு 22,845.73 கோடியை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது 2023-ஆம் ஆண்டை விட 206 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும், 17.83 லட்சம் புகார்கள் அடிப்படையில், ரூ.5,489 கோடி பணம் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், சைபர் மோசடியில் தொடர்புடைய 09.42 லட்சம் சிம்கார்டுகள் மற்றும் 02.63 லட்சம் ஐஎம்இஐ எண் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு நடந்த சைபர் மோசடிகள்:
2022-இல் 10,29,026 புகார்கள்.
2023-இல் 15,96,493 புகார்கள்.
2024-இல் 22,68,346 புகார்கள்.
English Summary
Indians lost Rs 22 845 crore to cyber fraud in 2024 alone