போர் பதற்றத்திற்கு இடையில் ஜப்பானை முந்திய இந்தியா!
India in 1st place
அமெரிக்காவின் வரி விதிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் உலக வர்த்தகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த குழப்பமான சூழ்நிலையிலும் இந்தியா தான் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கைக்குரிய நிலையாகத் திகழ்கிறது என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
போஃபா செக்யூரிட்டீஸ் நடத்திய ஆய்வின்படி, ஆசியாவின் முன்னணி நிதி மேலாளர்களிடையே இந்தியாவுக்கு அதிக மதிப்பீடு கிடைத்துள்ளது.
234 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட சொத்துகளை நிர்வகிக்கும் நிதி மேலாளர்கள் இதற்கான கருத்துக்கணிப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதில், இந்தியா 42% ஆதரவை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் 39% ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா வெறும் 6% ஆதரவே பெற்றுள்ளது.
பொதுவாக வரி மற்றும் வர்த்தக நெருக்கடி, விநியோகச் சங்கிலியின் மாறும் சூழ்நிலைகளில் இந்தியாவுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய பங்குசந்தை மற்ற ஆசிய நாடுகளைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட தற்காலிக பதற்றத்திலும் கூட இந்திய சந்தையின் நிலைத்தன்மை கவனிக்கப்படுகிறது.
பணப்புழக்க உயர்வு, வரி வசூல் வளர்ச்சி, கிராமப்புறங்களின் எதிர்பார்ப்பு ஆகியவையும், நிறுவனங்களின் லாபத்தில் இந்த ஆண்டுக்குள் 7.6% வளர்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.