உத்தரபிரதேசம் || மனைவி நடத்தையில் சந்தேகம் - குழந்தைகள் கண் முன் நடந்த கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் || மனைவி நடத்தையில் சந்தேகம் - குழந்தைகள் கண் முன் நடந்த கொடூர சம்பவம்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் ராகுல் மிஸ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் லக்னோ - பூர்வாஞ்சல் விரைவு சாலையில் காருக்குள் வைத்து, குழந்தைகள் முன்னிலையில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகள் உறைந்துபோய் அலறியுள்ளனர். இதனை அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து ராகுல் மிஸ்ராவை மடக்கி பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் ராகுலிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்ததாகவும், அது தொடர்பான மன உளைச்சல் அதிகரித்ததில் திடீரென மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றத்துக்கு சாட்சியான இரண்டு குழந்தைகளையும் கொல்வதற்கும் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து போலீசார் ராகுல் மிஸ்ராவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband kill wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->