ம. பி : பிறப்புறுப்பை கடித்த மனைவி - பாதுகாப்பு கேட்டு கணவர் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


பிறப்புறுப்பை கடித்த மனைவி - பாதுகாப்பு கேட்டு கணவர் பரபரப்பு புகார்.!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

"நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அதிலிருந்து என் மனைவியின் நடத்தை சரியில்லை. தினமும் வீட்டில் தெரியாதவர்களை அழைத்து வந்து பேசுவார். 

தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்ல என்று மனைவியிடம் பலமுறை விளக்கியும் அவர் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாமல் என்னையும் அவரது குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார். 

இதை பொறுத்துக்கொள்ளாமல் நான் மனைவியை திட்டினேன். அப்போது அவர் ஆத்திரமடைந்து என்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டார். வலி தாங்க முடியாமல் கதறிய என்னை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கிருந்து நான் மேல் சிகிச்சைக்காக குவாலியருக்கு அனுப்பப்பட்டேன் குவாலியரில், மருத்துவர்கள் பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்தனர். ஆகவே எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband complaint on wife in madhya pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->