திருமணவிழாவில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் - 100 பேர் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


திருமணவிழாவில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் - 100 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புறம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், எடப்பால் அருகே காலடி பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று துருவாணம் பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

அவர்களுக்கு திருமண விழாவில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விருந்தில் உணவருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த உறவினர்கள் அவர்களை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைற்கு கொண்டுச் சென்றனர். 

அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று திருமண விருந்து வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததா? என்று பார்ப்பதற்காக உணவு வகைகளிலிருந்து மாதிரியை சேமித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundrad peoples addmitted hospital for food poison at marriage function in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->