தென்னாப்பிரிக்காவில் சோகம்: 4 மாடி கோயில் இடிந்து 4 பேர் பலி; இந்திய வம்சாவளி நபர் மரணம்
Hindu temple construction collapsed South Africa
தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில், கட்டுமானப் பணியில் இருந்த 4 மாடி கோயில் ஒன்று வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியானவர் விவரம்:
உயிரிழந்தவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்கி ஜெய்ராஜ் பாண்டே (52) என்பவரும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் அந்தக் கோயிலின் நிர்வாக உறுப்பினராகவும், கட்டுமானத் திட்டத்தின் மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணியில் சிக்கல்:
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாகாண அமைச்சர் துளசிஸ்வே புதெலெசி, கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார்.
English Summary
Hindu temple construction collapsed South Africa