மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் எப்போது.? மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்ததாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்தான தகவலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "கொரோனா பெருந்தொற்று காரணமாகவே ககன்யான் திட்டம் காலதாமதமானது.

தற்போது ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ககன்யான் திட்டத்தில் முதற்கட்டமாக அக்டோபர் மாதம் ஆளில்லா சோதனை நடைபெற உள்ளது. 

அதனைத் தொடர்ந்து "வியோமித்ரா" ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும். இந்த இரண்டு சோதனைகளும் வெற்றி பெற்றதை அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது போல அவர்களை திரும்பக் கொண்டு வருவதும் மிகவும் முக்கியம்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gaganyan space flight trial test will begin in October


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->