தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற நபர் ; விரைந்து காப்பாற்றிய பெண் போலீஸ்! - Seithipunal
Seithipunal


இரயில் வரும் நேரம் பார்த்து, தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை, அதிர்ஷ்டவசமாக பெண் போலீஸ் ஒருவர் காப்பாற்றினார்.

மேற்கு வங்க மாநிலத்தில், புர்மா மெத்னிபூர் பகுதியில் உள்ள இரயில் நிலைய தண்டவாளத்தின் அருகே இளைஞர் ஒருவர் வந்து நின்று கொண்டிருந்தார். ரயில் வரும் சமயம் பார்த்து திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

இதை கவனித்த ரயில்வே போலீஸ் சுமதி தண்டவாளத்தில் படித்திருந்த அந்த நபரை, தூக்கி தூரமாக வீசினார். சுமதிக்கு அங்கு இருந்த இரண்டு பயணிகள் உதவி செய்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அதிவிரைவு ரயில் ஒன்று கடந்தது. தக்க சமயத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற அந்த நபரை விரைந்து காப்பாற்றிய ரயில்வே போலீஸ் சுமதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த இளைஞரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fortunately Women Police secured a traveler who tried for sucide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->