விமான சேவைகளுக்கு நீடிக்கும் தடை.! விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக சர்வதேச விமான பயணிகளுக்கான  கட்டுப்பாடுகள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உருவாகியது. 

தொடர்ந்து, அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரானா வைரஸ் இதுவரை பல லட்சம் உயிர்களை பலி வழங்கியிருக்கிறது. 

எனவே கொரோணா பரவாமல் இருக்க பல்வேறு நாடுகளில் வெளிநாடு, வெளிமாநில, வெளிமாவட்ட போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தவிர்க்க முடியாத சூழலில் இந்தியா வரும் பலரும் கொரோனா விதிமுறைகளின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவர்.

தற்போது பரல்கள் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் சரக்கு சேவைகளும், விமானங்களும் இந்த விதிமுறைகளுக்கு அடங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flight management announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->