காலை 11 மணிக்கு மாநிலம் முழுவதும் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும், எங்கு தெரியுமா?
Every one Should Sing National anthem at 11 AM today
இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர்.
இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் தேசிய கீதம் பாட வேண்டும் என மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநிலம், முழுவதும் உள்ள பள்ளி கல்லுரிகள் மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் எனவும் இது மத்திய அரசின் சுவராஜ் மகோத்சவின் ஒரு பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Every one Should Sing National anthem at 11 AM today