'அயோத்தி ராமர் கோவில் பயணம் தான் என் வாழ்நாளின் சிறந்த அனுபவம்': எரோல் மஸ்க் நெகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


'அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,'' என உலகின் பெரும் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள எரோல் மஸ்க் மற்றும் அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் இருவரும் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்று வந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது: தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று இது எனவும், இந்தியா அருமையான மற்றும் அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல், அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது என்றும், இந்தியா ஒரு அற்புதமான இடம் என்றும், முடிந்தவரை இந்தியாவுக்கு பலரும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன என்றும், அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன எனவும்,  இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் எரோல் மஸ்க் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Errol Musk says Ayodhya Ram Temple visit was the best experience of his life


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->