விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொட்டபல்லாபூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் ஒன்பது
பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து விநாயகர் சிலை ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், விபத்து ஏற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police case file against vinayagar oorvalam create members for boy died issue in karnataga


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->