சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: காங்கிரஸ் பிரியங்காவின் கணவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதோடு, ஹரியானாவில் விதிமுறைகளை மீறி நிலம் வாங்கியது குறித்த வழக்குகளும் உள்ளன.

குறித்த வழக்குகள் தொடர்பில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, நாளை 17-ஆம் தேதி டில்லியில் மீண்டும் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நிதி முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை கையகப்படுத்துதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate summons Congress Priyanka husband again in illegal money transfer scam case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->