அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு..! - Seithipunal
Seithipunal


அருணாச்சலப் பிரதேச மாநிலம் சாங்லாங்கில் இன்று (திங்கள்கிழமை) காலை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது காலை 8:15 மணியளவில் சாங்லாங்கிலிருந்து தென்கிழக்கே 86 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் அருணாச்சல பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் வடகிழக்கு பகுதி அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake of magnitude 4 point 5 hits Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->