ஓட்டுநர் அலட்சியம்... கவர்மெண்ட் பஸ்சை அசால்ட்டாக ஆட்டைய போட்ட பெருசு...! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் ஒங்கோல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தனர். அங்கு பேருந்து சாவியை பேருந்திலேயே விட்டு விட்டு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஓய்வு அறைக்கு சென்றனர்.அச்சமயம்,பேருந்து நிலையத்தில் மது போதையில் அல்லாடி வந்த முதியவர் பேருந்தில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தார்.

அந்த பேருந்து நிலையத்திலிருந்த பயணிகள், இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சற்று நேரத்திலேயே பேருந்தை வேகமாக ஓட்டி சென்றார்.மேலும், முதியவர் பேருந்தை கடத்திச் செல்வது குறித்து பேருந்து நிலையத்திலுள்ள புறக் காவல் நிலைய காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வேனில் சென்று காவலர்கள் பேருந்தை விரட்டி சென்றனர்.இதில் முதியவர் பேருந்தை தாறுமாறாக வேகமாக ஓட்டி சென்றார். அதன் பிறகு கடைசியாக ஒங்கோல்-கர்னூல் இடையே இருக்கும் மேம்பாலத்தில் பேருந்தை மடக்கி பிடித்தனர்.

இதில் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் பேருந்தை விபத்தில் சிக்காமல் ஓட்டி சென்றதால் காவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.மேலும், ஓட்டுனரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drivers negligence goat attacked government bus


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->