டெங்கு காய்சலுக்கு பலியான பெண் டாக்டர்.. புதுவையில் நடந்த சோகம்..!
Doctor Death in Dengu Fever
டெங்கு காய்ச்சலால் பெண் டாக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் நெ ட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை கிராமத்தை சேர்ந்தவர் தனுஷியா (25). இவர் சென்னையில் பல் மருத்துவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் தனுஷியாவிற்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென தனுஷியா காய்ச்சல் அதிகமானதை அடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெங்கு காய்ச்சலுக்கு பல் டாக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Doctor Death in Dengu Fever