"மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை" - கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ தம்பதியினர் தற்கொலை.!!
doctor couples sucide in kerala
"மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை" - கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ தம்பதியினர் தற்கொலை.!!
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் மலரம்பா பகுதியில் வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ராம் மனோகர் என்பவர் தன் மனைவி ஷோபாவுடன் வசித்து வந்தார். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தனர்.
சமீபத்தில் இருவரும் இந்த கிளினிக்கை மூடிவிட்டு கோழிக்கோட்டில் உள்ள தங்களது இல்லத்திற்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் இவர்களின் வீடு திறக்கப்படாமலேயே இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவர்களது மகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி தம்பதியினரின் மகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தம்பதியினர் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனே அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தம்பதிகள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தம்பதிகளின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், “தங்கள் இருவருக்கும் உடலில் நோய் இருக்கின்றது. தங்களை மகள், மருமகன் நன்றாகவே கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
.
English Summary
doctor couples sucide in kerala