காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்.! காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற மகள்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொடூரமாக காதலனுடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹசிரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியாபுரா பகுதியில் 38 வயதான பெண் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, 38 வயதான தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண்ணின் மகள், 25 வயதுடைய ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்தக் காதலுக்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மகள் காதலுடன் சேர்ந்து தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 17 வயது சிறுமியையும், அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter and with her boyfriend to murder mother in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->