காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்.! காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற மகள்.!
daughter and with her boyfriend to murder mother in Karnataka
மத்திய பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொடூரமாக காதலனுடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஹசிரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியாபுரா பகுதியில் 38 வயதான பெண் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, 38 வயதான தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண்ணின் மகள், 25 வயதுடைய ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்தக் காதலுக்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மகள் காதலுடன் சேர்ந்து தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 17 வயது சிறுமியையும், அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
daughter and with her boyfriend to murder mother in Karnataka