மனைவியை அடித்துக் கொன்ற காங்கிரஸ் தலைவரின் மகன் - விசாரணையில் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மனைவியை அடித்துக் கொன்ற காங்கிரஸ் தலைவரின் மகன் - விசாரணையில் சிக்கிய சம்பவம்.!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உள்ள கடந்த பதினான்காம் தேதி அன்று ஹைதராபாத் தனியார் மருத்துவமனைக்கு, வல்லப் ரெட்டி என்ற வாலிபர் தனது மனைவி லஹரி என்பவரை சிகிச்சைக்காகக் கொண்டு வந்தார். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதற்கிடையே காவல்நிலையத்திற்குச் சென்ற லஹரியின் பெற்றோர், மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து லஹரியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அங்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில், லஹரியின் இறப்புக்கு மாரடைப்பு காரணமில்லை என்பதும், அவரின் உடல் உள்ளுறுப்புகள் கடுமையான தாக்குதல் காரணமாக சேதமடைந்திருப்பதும், தெரியவந்தது. 

இதன் அடிப்படையில் போலீசார் வல்லப் ரெட்டி மற்றும் அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரங்கசாய் ரெட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில், வல்லப் ரெட்டி - லஹரியை அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

அதிலும் குறிப்பாக லஹரியை, வல்லப் ரெட்டி சுவற்றில் அடித்ததில் அவருடைய தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து போலீசார் வல்லப் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader son arrested for kill wife in hydrabad


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->