செய்யாறில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - போலீசார் விசாரணை.!
college students fight in seyyaru
செய்யாறில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - போலீசார் விசாரணை.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தக் கல்லூரியில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகள் போதிய அளவுக்கு இல்லாததால் மாணவர்கள் பேருந்துகளில் ஓடிச்சென்று முட்டி மோதிக் கொண்டு இடம் பிடித்து கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கல்லூரி முடித்துவிட்டு வெளியில் வந்தனர். அப்போது புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
அதில் அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து பலமாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி மற்றும் பள்ளி வேளைகளில் அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
college students fight in seyyaru