பஞ்சாப் எல்லையில் சிக்கிய சீன ட்ரோன்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்ம ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து நேற்று முன்தினம் பசில்கா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது கண்டுபிடித்தனர். 

இந்த ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்ட டி.ஜே.ஐ. மாட்ரைஸ் 300 ஆர்.டி.கே. என்ற வகையைச் சேர்ந்ததாகும். இதேபோன்று ஒரு டிரோனை பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது வேறு இடத்தில் கண்டுபிடித்தனர். 

அந்த ட்ரோன் சுமார் 2.730 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ட்ரோன் கடந்த 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட இரண்டாவது டிரோன் குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china trone found in punjab border


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->