துர்கா பூஜை விழா பந்தலில் ஏற்பட்ட சோகம்: குழந்தை உள்பட 3 பேர் பலி!         - Seithipunal
Seithipunal


பீகார், கோபால்கஞ்ச் பகுதியில் துர்கா பூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்த பூஜைக்காக பல இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. 

அங்குள்ள ஒரு பந்தலில் துர்கா விழா கொண்டாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பந்தலின் நுழைவு வாயிலில் திடீரென கூட்ட நெரிசல் உண்டாகி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தள்ளி கீழே விழுந்தனர். 

இதில் ஒரு குழந்தையும் சிக்கி கீழே விழுந்த நிலையில் 2 பெண்கள் குழந்தையை காப்பாற்ற முயன்றனர். அப்போது பெண்களும் கீழே விழுந்ததால் எழுந்திருக்க முடியாமல் பலரும் அவர்கள் மீது ஏறி ஓடியதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் மற்றும் குழந்தை என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பெண்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் 3 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar durga puja 3 killed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->