காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கண்களை சேதப்படுத்தி காமுகன்கள் அட்டூழியம்.! 
                                    
                                    
                                   Bihar Child girl Sexual abuse by gang and damaged his eyes due to Eyewitness issue 
 
                                 
                               
                                
                                      
                                            பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டம் காவக்கா பார்க்கி கிராமத்தில், 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியாக இருந்து வந்துள்ளார். 
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற நிலையில், அவருடன் சிலரும் சென்றுள்ளனர். இதன்போது, அதே கிராமத்தை சார்ந்த 3 இளைஞர்கள், சிறுமியை தூக்கி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மேலும், சிறுமி தாங்கள் தொடர்பான தகவலை தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் கண்களை கூர்மையான ஆயுதத்தால் சேதப்படுத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியுடன் சென்ற சிறுவன் ஒருவன், வீட்டில் வந்து பெற்றோருக்கு தகவலை தெரிவித்துள்ளான். 

இதனால் பதறிப்போன பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், சிறுமி மயக்க நிலையில் இருந்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுப்பி வைத்துள்ளனர். 
சிறுமி மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமியின் பார்வை முற்றிலும் பறிபோயுள்ளதா? என்பது குறித்த சிகிச்சை சோதனை இன்னும் நடைபெறவில்லை. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Bihar Child girl Sexual abuse by gang and damaged his eyes due to Eyewitness issue