சைக்கோ போல் மாறிய பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன்?! அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை!  - Seithipunal
Seithipunal


மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பீகார் மாநிலம், கயா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அம்மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் நரேஷ் ராம் துரி என்பவர், சிறுமியை மறைமுகமான இடத்துக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும் சிறுமியை பாலியல் கொடுமை செய்த போது, அதை காணொளியாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சிறுமையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, நரேஷ் ராமை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவருக்கு மருத்துவமனை பரிசோதனை செய்து, அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி தெரிவிக்கையில், இந்த விஷயத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் ராம் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இவர் ஒரு தீவிர மன நோயாளி என்றும், இவரை வெளியில் விடாத அளவுக்கு சிறை தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar BJP Ex MLA Son Arrested Pocso


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->