நம்பிக்கை துரோகம்! ஆண் நண்பரை நம்பிச் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...! - மது ஊற்றி பாலியல் வன்கொடுமை...!
Betrayal trust horror that befell college student who trusted her boyfriend harassment after pouring alcohol
தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள சவுட்டுப்பள்ளியை சேர்ந்த உதய் என்ற இளைஞர், இப்ராஹிம் பட்டினத்தில் செயல்படும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 14-ந்தேதி, தன்னுடன் கல்வி பயிலும் மாணவியை டீ அருந்துவதற்காக தில்சுக் நகரிலுள்ள காபி கடைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் இப்ராஹிம் பட்டினம் நோக்கி திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்பின், இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள மதுக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கிய உதய், பி.டி.எல் சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு மாணவியை காரில் அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு மாணவியை வற்புறுத்தி மது அருந்தச் செய்ததாகவும், அதன் காரணமாக மாணவி கடும் போதைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட உதய், மாணவியை இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி இப்ராஹிம் பட்டினம் காவலர்களிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவலர்கள் உதயை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Betrayal trust horror that befell college student who trusted her boyfriend harassment after pouring alcohol