மூன்று மனைவிகளுக்காக திருடனாக மாறிய கணவன்!
bengaluru Thief arrested
பெங்களூருவில் மூன்று மனைவிகளும், 9 குழந்தைகளும் வாழும் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற காரணத்தால், பபாஜான் என்ற நபர் திருட்டை தொழிலாக மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையம் நிலுவையில் இருந்த பல திருட்டு வழக்குகளை விசாரித்தபோது, பபாஜான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 188 கிராம் தங்கம், 550 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 8 திருட்டு வழக்குகள் முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில் பபாஜான், தனக்கு மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் பெங்களூரு புறநகரில் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். குடும்பச் செலவுகளுக்காகவே திருட்டில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இத்தகைய வாழ்க்கைச்சூழ்நிலை ஒருவரை திருட்டுக்குத் தள்ளியிருப்பது அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.