தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுனேத்ரா பவார் நியமனம்; மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் பார்த் பவார்..!
Ajit Pawars wife appointed as NCP national president
மகாராஷ்டிரா மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அஜித் பவார் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இதனால் அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
சுனேத்ரா பவார் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றதால், சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த இடம் காலியாக இருந்தது.
இந்த சூழலில், அஜித் பவார்- சுனேத்ரா பவாரின் மகனான பார்த் அஜித் பவார் மாநிலங்களவை எம்.பி.-க்கு பரிந்துரைக்கப்படுவார் என பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். அத்துடன், மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சுனேத்ரா பவார் அக்கட்சியின் தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Ajit Pawars wife appointed as NCP national president