பெங்களூரு: 4வது மாடியில் இருந்து குதித்து ஏர் ஹோஸ்டஸ் தற்கொலை.!!
Air hostess committed suicide by jumping from 4th floor in bangalore
கர்நாடகா மாநிலத்தில் குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ககனசக்தி அர்ச்சனா (28). இவர் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவரும், சாஃப்ட்வேர் இன்ஜினியரான வாலிபர் ஒருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து இவர்களிடையே நேற்று முன்தின இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ககனசக்தி அர்ச்சனா குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ககனசக்தி அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ககனசக்தி அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ககனசக்தி அர்ச்சனா ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Air hostess committed suicide by jumping from 4th floor in bangalore