"நீட் தேர்வு" எழுதிய மாணவன்... 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.! போலீஸ் விசாரணை..!
A student who wrote NEET exam after committed suicide by jumping from the 10th floor in rajasthan
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியும், சோகத்தையும் உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த முகமது நசீர் (22) என்ற மாணவர் ராஜஸ்தான் மாநிலம் விக்யான் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் முகமது நசீர் ஜெய்ப்பூரில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை என்பதால் மனவேதனை அடைந்த முகமது நசீர், நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A student who wrote NEET exam after committed suicide by jumping from the 10th floor in rajasthan