இரகசிய தகவலுடன் பிடிபட்ட புறா... எல்லையில் அலர்ட்டாகும் அதிகாரிகள்.!!
a Pakistan Messenger Pigeon Neutralized by Indian village people in jammu
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய நிலைகளை இரகசியமாக கண்காணிக்க பாக்கிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேமராக்களை பொருத்திய பிரத்தியேக ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத்தின் அனைத்திற்கும் தக்க பதிலடி வழங்கி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் கத்துவா மாவட்டத்தின் ஷிலாயரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை புறா ஒன்று பயந்துகொண்டு வட்டமிட்டு இருந்துள்ளது. பாகிஸ்தானின் எல்லைக்கு ருகே இருக்கும் கிராமத்தில் பறந்து புறாவின் இறக்கையில் இளஞ்சிவப்பு நிறமானது பூசப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமான கிராம மக்கள் புறாவை பிடித்துள்ளனர்.
இந்த புறாவை சோதனை செய்கையில் கால்களில் சிறு வளையமும், வளையத்தில் எண்ணும் இருந்துள்ளது. இந்த புறா பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுதினகத்தை அடுத்து, காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், புறாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே உளவுத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
a Pakistan Messenger Pigeon Neutralized by Indian village people in jammu