100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக 125 நாள் வேலைத்திட்டம்; மத்திய அரசு புது திட்டம்; காங்கிரஸ் எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு வேலை வழங்கும் ஒரு பகுதியாக ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக, 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி, இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனையடுத்து, அனைத்து எம்பிக்களும் பாராளுமன்றத்தில் வர வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய மசோதாவில் அம்சங்கள் என்ன..?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாப்படி வேலை நாட்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பழைய திட்டத்தின்படி மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், புதிய திட்டத்தில், மாநில அரசுகளும் நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கும், இமயமலை மாநிலங்கள், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நிதிப் பகிர்வு 90:10 ஆகவும், சட்டசபை கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும். மேலும், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1.51 லட்சம் கோடி செலவாகும் நிலையில், மத்திய அரசு ரூ.95,692 கோடி வழங்கவுள்ளது.

மேலும், நீர் பாதுகாப்பு, ஊரக கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் பணிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அந்த காலகட்டத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை 60 நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட வேண்டும்.

பணி முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா கூறுகையில், மஹாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்..? இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். பெயர் மாற்றம் போது எல்லாம் அதிக செலவாகும். இந்த மாற்றத்துக்கான நோக்கம் என்னவென புரியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 125 day employment scheme as an alternative to the 100 day employment program


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->