5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.! தந்தை மற்றும் தாய்மாமாவிற்கு தலா 84 ஆண்டு சிறை.!
84 years in prison for a father and uncle who sexually harassing a 5 year old girl in kerala
கேரள மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை மற்றும் தாய் மாமாவிற்கு தலா 84 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் ஐந்து வயது சிறுமி. இவர் பள்ளியில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர் இதுகுறித்து சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, சிறுமியின் தந்தையும், தாய் மாமாவும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட இடுக்கி போலீசார், சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தேவிகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமாவிற்கு தலா 84 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.
English Summary
84 years in prison for a father and uncle who sexually harassing a 5 year old girl in kerala