ஆசை வார்த்தை கூறி 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்.. தலைமை ஆசிரியர் கைது.!
6 school girls raped in rajasthan headmaster arrested
ஆசை வார்த்தை கூறி 6 பள்ளி சிறுமிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் என்ற பகுதியில் அரசு பள்ளியில் படித்த 6 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ரமேஷ் சந்திரா கட்டாரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 8 வயது 12 வயது வயது வரை உள்ள சிறுமிகள் விடுமுறை நாட்களில் விளையாட வந்த சிறுமிகளை தனது காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாக்லேட் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து தன் வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் சிறுமிகளுடன் ஆபாச திரைப்படங்கள் பார்த்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாகிய நிலையில் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
6 school girls raped in rajasthan headmaster arrested