அசாமில் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தின் சோனிட்பூரில் (திங்கள்கிழமை) இன்று காலை 8:03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகியுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அசாமின் குவஹாத்தி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சில நொடிகள் நில நடுக்கம் உணரப்பட்டது.

மேலும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொதுசேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் அசாமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 point 4 magnitude earthquake hits Assam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->