உ.பி: ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு கோமதி ஆற்றில் குளித்த 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் உயிரிழந்தவர்கள் 18-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள், அவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர் என்று சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் அவர்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று திருமதி கவுர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Drowned gomati river while bathing after holi in uttar pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->