உ.பி: ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு கோமதி ஆற்றில் குளித்த 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் உயிரிழந்தவர்கள் 18-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள், அவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர் என்று சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் அவர்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று திருமதி கவுர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 Drowned gomati river while bathing after holi in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->