மும்பை : ரூ.4.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.! 2 பேர் கைது
4 crore 57 lakhs worth gold seized in Mumbai airport
மும்பை விமான நிலையத்தில் ரூ.4.57 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்தனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த டெல்லியை சேர்ந்த முகமது சுலைமான் என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து ரூபாய் 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 300 கிராம் தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்த, அப்துல் பாசித் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூபாய் இரண்டு கோடியே 17 லட்சம் மதிப்பிலான நான்கு கிலோ தங்கம் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை செய்ததில் துபாயிலிருந்து ஒரே நபருக்காக தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த அதிகாரிகள், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 crore 57 lakhs worth gold seized in Mumbai airport