அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டு கொன்றுவிட்டு இந்திய இளைஞர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு இந்தியா இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதியினர் 6 வயது மகனுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடைய பெயர் யோகேஷ் நாகராஜப்பா , பிரதீபா வை அமர்நாத், யாஸ் ஹான்னல் என்பது தெரிய வந்தது.

அமெரிக்காவின் பால்டிமோர் கவுண்டி பகுதியில் வசித்து அவர்கள் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிரிழந்து சடலமாக கிடப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும் முதற்கட்ட விசாரணையில் நாகராஜப்பா, தனது மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டு விட்டு, இறுதியாக அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 indians suicide in America


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->