நள்ளிரவில் இடிந்து விழுந்த இரண்டு மாடி வீடு - பறிபோன 3 குழந்தைகளின் உயிர்.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் இடிந்து விழுந்த இரண்டு மாடி வீடு - பறிபோன 3 குழந்தைகளின் உயிர்.!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததும், அதனால் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளதும் தெரிய வந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 childrens died and 7 peoples injured for building collapse in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->