20000 அரசு பள்ளி மாணவர்கள் நிரந்தர நீக்கம் - பீகார் அரசு அதிரடி.!
20000 thousand students dismissed in bihar
தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி, தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் பள்ளிக்கு வராததற்கான காரணம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரிக்கப்பட்டது.
அந்த விசாரணையில், மாணவர்கள் வராததற்கான உரிய காரணம் இருப்பின், பெற்றோர்களின் கடிதத்தோடு மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டார்கள். இருப்பினும், திரும்பி வராத மாணவர்களை அரசுப் பள்ளிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதுவரைக்கும் 5,309 அரசுப் பள்ளிகளில் 20,60,340 மாணவர்கள் நிரந்த நீக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ளும் மாணவர்கள் அங்கே படிப்பைத் தொடராது, அவர்களது பெற்றோரின் ஏற்பாட்டின்படி வேறு ஊர்களின் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பள்ளிப்படிப்பை தொடர்கிறார்கள்.
இதனால், ஒவ்வொரு வருடமும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களுக்கான ரூ. 3000 கோடியில் கணிசமான கோடிகள் விரையமாகின்றன. முறைகேடாக, அரசு சலுகைகளை பெறும் சுமார் மாணவர்கள் கண்டறியப்பட்டு, பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாலே ஒரு வருடத்திற்கு ரூ.300 கோடி மிச்சமாகும். இதுதான் கல்வித்துறை அதிகாரிகள் சொல்லும் கணக்கு.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதில், குழந்தை தொழிலாளர்களாக சென்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பவில்லை. அவர்களை அரசு முறையாக கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
20000 thousand students dismissed in bihar