மம்தாவுக்கு வந்த சோதனை; பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ள 20 திரிணமூல் எம்பிக்கள்..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மேற்கு வங்​க சட்டமன்ற தேர்தலில் 15 ஆண்​டுகளாக அம்மாநிலத்தில் ஆட்​சி​யில் இருந்த மம்தா பானர்​ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை படுதோல்வியடைய வைத்து, பாஜக பெரும்வாரியாக வெற்றிப் பெற்று முதல் ​முறை​யாக ஆட்சியை பிடித்​துள்​ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

மம்தா பானர்ஜி சொந்த தொகுதிலேயே தோற்கடிப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பல அதிர்ச்சி தரும் சம்பவங்களே அங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சியின் எம்.பி ககோலி கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.

மம்​தா​வின் தோல்​வியை தொடர்ந்து அவரது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்​குள் கடும் மோதல் தீவிரம் அடைந்​துள்​ளது. மம்தா மீதும் கட்​சி​யின் மீதும் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் சுமார் 60 பேர் ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் அணி திரண்​டனர். இதையடுத்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் பதவியும்மம்தாவுக்கு பறிபோனது. அந்த பதவியை ரிதப்​ரதா பானர்ஜி கைப்​பற்​றியது மம்​தாவுக்கு அதிர்ச்​சியை கொடுத்துள்ளார்.

அத்துடன், திரிண​மூல் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் பலர் தங்​கள் கட்​சிப் பதவியை ராஜி​னாமா செய்துள்ளதோடு, சிலர் கட்சியி​லிருந்து வெளி​யேறினர். கவுன்சிலர்கள், கொல்கத்தா மேயர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழல் மம்தா இருக்கும் போது, திரிண​மூல் கட்​சிக்​குள் ஏற்​பட்​டுள்ள அரசி​யல் குழப்​பம் தற்​போது மேற்கு வங்​கத்தை தாண்டி நாடாளுமன்றத்துக்குள்ளும் பரவியுள்ளது. 

அதாவது, திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து அக்கட்சியின் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,  ''நான் உட்பட சுமார் 20 டிஎம்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை நாங்கள் எடுத்திருப்பதை தெரிவித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் எதிர்கால அரசியல் பாதை என்டிஏ உடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறாம்''என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ஹாட் எம்பி ஹாஜி நூருல் இஸ்லாம் மறைவை அடுத்து அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. தற்போது கட்சிக்கு 28 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாத எண்ணிக்கையிலான எம்பிக்கள் தனி அணியாக செயல்பட முடியும். அந்தவகையில் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய முடியாது. எனவே, இவர்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர். இது மேற்கு வங்க அரசியலில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 Trinamool MPs have written to the Speaker expressing their desire to join the BJP alliance


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->