அதிர்ச்சி - கள்ளசாராயம் குடித்து 20 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 16 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதன் முடிவில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 peoples died for drunk spurious liquor in bihar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->