300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமி..! மீட்பு பணிகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள மூங்வாலி கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராவிதமாக அப்பகுதியில் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சிறுமியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் நான்கு ஜேசிபி மற்றும் 6 பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சிறுமி சுமார் 30 அடி ஆழத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவத்தை அறிந்து சிறுமியை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Year Old Girl Falls Into 300 Foot Deep Borewell In Madhyapradesh Rescue Ops On


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->