காவிரி ஆற்றில் மூழ்கி 2 இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பலி...! - Seithipunal
Seithipunal


மைசூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்(23). ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் சிரந்த்(23). இவர்கள் இரண்டு பேரும் விடுதியில் தங்கி மைசூரில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

பின்பு அங்கிருந்து சென்று இளவாலா பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக சுனில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து நீரில் தத்தளித்த சுனிலை காப்பாற்றுவதற்காக சிரந்த்தும் ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 engineering college student drowned kaveri river in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->