ஒடிசாவில் கோர விபத்து - பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலி.! 8 பேர் காயம்
10 killed 8 injured in 2 bus accident in Odisha Ganjam district
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரகள் தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கஞ்சம் மாவட்டத்தின் திகபஹண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, இரவு 1 மணியளவில் ராயகடா மாவட்டத்தில் உள்ள குடாரியில் இருந்து எதிர் திசையில் வந்த ஒடிசா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எட்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்த அனைவரும் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10 killed 8 injured in 2 bus accident in Odisha Ganjam district