ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை...தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட ஊழியர் கைது!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை...தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட ஊழியர் கைது!
ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மிக முக்கியமான ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் விஷால் யாதவ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7-ந்தேதி, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைதுல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது.
இதனிடையே, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த முக்கிய தகவல்களை கண்டறிய பாகிஸ்தான் உளவுத்துறை முயற்சி செய்து வருவதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மிக முக்கியமான ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் விஷால் யாதவ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லி கடற்படை அலுவலகத்தில் உள்ள கப்பல்துறை இயக்குநரகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் பிரியா சர்மா என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகி வாட்ஸ் அப் மற்றும், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் விஷால் யாதவ் பேசிவந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரியா சர்மாவிடம் ராணுவ தகவல்களை பகிர்ந்து கொண்டு, அதற்கு பதிலாக சில ஆயிரங்கள் பணத்தை விஷால் யாதவ் பெற்றுள்ளார். பின்னர் அதிக பணம் பெறுவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை பிரியா சர்மாவிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், விஷால் யாதவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சி.ஐ.டி.விஷ்ணு காந்த் கூறுகையில், இந்திய பெண் போல் போலியான பெயரை வைத்துக் கொண்டு பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் விஷால் யாதவிடம் பேசியுள்ளார் என்றும், அந்த நபரிடம் ராணுவ தகவல்களை பகிர்ந்து கொண்டு அதற்கு பதிலாக விஷால் யாதவ் பணத்தை பெற்று வந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவரது மொபைல் போனில் இருந்த குறுஞ்செய்திகள் மூலம், ராணுவ தகவல்களை விஷால் யாதவ் கசியவிட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தானை சேர்ந்த நபர்தான் பிரியா சர்மா என்ற போலியான பெயரில் விஷால் யாதவிடம் பேசியிருக்கிறார் என்பதும் உறுதியானது. கைது செய்யப்பட்ட விஷால் யாதவிடம் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை...தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட ஊழியர் கைது!