அதிர்ச்சி தகவல்! மகப்பேறு மருத்துவர்கள் தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் குறித்து வெளியிட்ட பகீர் தகவல்...! - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்களுக்கு குழைந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும், திருமணமான பெண்கள் அனைவருமே தாய்மை நிலைக்கு ஏங்குகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்த பிறகு, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் ஆசைப்படுவார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள்.

அவ்வகையில், தமிழகத்தில் ஏறக்குறைய 40% தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது,"குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது.

குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.தமிழ்நாட்டில் 40 % க்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ளன.தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பாலை ஒப்பிடுகையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking information Obstetricians reveal shocking information about mothers who dont breastfeed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->