விளையாட்டாக இருந்த காயம்... விபரீதமான முடிவு...! - கேரளாவில் 6 வயது சிறுமி பலி..! - அதிர்ச்சியை ஏற்படுத்திய 'ரேபிஸ்' வைரஸ்...!
playful injury tragic outcome 6 year old girl dies Kerala shocking rabies virus
திருச்சூர் அருகேயுள்ள செருத்திருத்தி தாழபுரா கோடம் குன்னம் பகுதியை சேர்ந்த அலி சகாபி – சபியா தம்பதியரின் செல்ல மகள் சன்ஹா மஹ்ரின், அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த ஆறு வயது சிறுமி. சிரிப்பாலும் சுறுசுறுப்பாலும் அனைவரையும் கவர்ந்திருந்த அந்த குழந்தையின் உயிர் திடீரென அணைந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சன்ஹா மஹ்ரின் திடீரென மயங்கி சரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவளை வட்டம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையின் போது, சில நாட்களுக்கு முன்பு சிறுமி குப்பைக்குழியில் தவறி விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்கு அப்பாற்பட்ட எந்த தீவிர உடல்நலப் பிரச்சினையும் வெளிப்படையாக இல்லாததால், மருத்துவர்கள் பல்வேறு கோணங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஏதேனும் மறைமுக தொற்று தாக்கியுள்ளதா என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சன்ஹா மஹ்ரின் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெளிவாகாததால், இயற்கைக்கு மாறான உயிரிழப்பாகவே முதற்கட்டமாக கருதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில் சிறுமியின் உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறுமி வெறிநாய் கடி மூலம் பரவும் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கொடிய வைரஸ் தாக்கமே உடல்நிலையை தீவிரமாக பாதித்து, சன்ஹா மஹ்ரின் உயிரிழப்பிற்கு காரணமானது என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
English Summary
playful injury tragic outcome 6 year old girl dies Kerala shocking rabies virus